Lyrics
ஆசை ஆசை ஆசை மகதீரன் நீ தொட
ஆசை தீர தோகை உனை நாளும் கொஞ்சிட
தினம் மாலை நேரம் காணும்
தோற்றம் யாவும் நீயடா
இனிமேலும் வேந்தன் இன்று வஞ்சிமானின்
தோளை சேர வேலி ஏது
ஆசை ஆசை ஆசை மகதீரன் நீ தொட
ஆசை தீர தோகை உனை நாளும் கொஞ்சிட
மன்மதனோ மார்பின் மீது காமன் அம்புகள் வீசிட
சம்மதமோ தோழி நானும் கூப்பிட
அனுமதி சொல் கண்கொண்டு அந்தி நேரத்தில் அழகே நீ
அதிபதியாய் காதலை தான் கொண்டாட
வாளை ஏந்தும் வீரன்
எந்தன் தேகம் ஏந்திட வா
இந்த மோகம் தீர்க்கும்
தாகம் தீர்க்கும் சேவை செய்ய வா
இந்த மங்கை மேனி உந்தன் மஞ்சம்
ஏற்றுக்கொள் இந்த்ரபுத்ர
ஆசை ஆசை ஆசை மகதீரன் நீ தொட
ஆசை தீர தோகை உனை நாளும் கொஞ்சிட
மாவீரா
மாவீரா
மாவீரா
மாவீரா
தினவெடுத்த சிங்கமே
சேர்ந்ததென்ன மணிமானை
குளுமையுடன் தீயுமே கலந்ததா
மதம் கொண்ட அங்கமே
அன்னக்கிளியை அழைக்காதா
அணு அணுவாய் சொர்க்கமே காண்போமா
தீரன் எந்தன் ஆண்மை
காட்டிய தாபமூட்டவா
அதற்காக உன்னை கைது செய்து
நெஞ்சை பூட்டவா
நெடுஞ்ஜென்மம் தாண்டி ஆசை பொங்க
நாளும் நீண்ட யாகம் செய்து என்னை கூடி
நாளாய் அருங்காதல் தோழி தான்
கொஞ்ச மூயும் நாளில் எழும் மோகம் கோடிதான்
இவள் தோளை நானும் கூடக்கூட
நாளும் லீலைதான்
மடிபூஜை யாவும் நாளும் போதும்
கண்துஞ்சாது செய்ய செய்ய
ஆசை ஆசை ஆசை
ஆசை ஆசை ஆசை
Writer(s): Vaalee, Maragathamani
Lyrics powered by www.musixmatch.com