Top Songs By Magizhan Santhors
Credits
KOMPOSITION UND LIEDTEXT
Janarthana Pulenthiran
Songwriter:in
Nitha Jegan
Songwriter:in
Lyrics
கனா காணும் இன்ப காலத்தில் எந்தன்
நிலா போனதென்ன தூரத்தில்
வினா வீசிவரும் பார்வைகள் நெஞ்சினில்
உலா போவதென்ன
கனா காணும் இன்ப காலத்தில் எந்தன்
நிலா போனதென்ன தூரத்தில்
வினா வீசிவரும் பார்வைகள் நெஞ்சினில்
உலா போவதென்ன
இரவுகள் தனிமையில் நரகமாய் போகுதுன்
நினைவுகள் இமைகளில் தூறலை தூவுது
என் நெஞ்சில் ஜீவன் இல்லை ஏன்
உன் நெஞ்சில் ஈரம் இல்லை
கல் நெஞ்சகாரி கொல்லாதடி என்னை
கல் நெஞ்சக்காரி கொல்லாதடி
கல் நெஞ்சக்காரி கொல்லாதடி ஒரு
கல்ல நீ சொல்லா வீசாதடி
கல் நெஞ்சகாரி கொல்லாதடி என்னை
கல் நெஞ்சக்காரி கொல்லாதடி
கல் நெஞ்சக்காரி கொல்லாதடி என்
கண்ணாடி நெஞ்ச தாக்காதடி
கனா காணும் இன்ப காலத்தில் எந்தன்
நிலா போனதென்ன தூரத்தில்
வினா வீசிவரும் பார்வைகள் நெஞ்சினில்
உலா போவதென்ன
விழிவழியும் துளிகளிலே
பெரும் வலியென வழியுது உனதுறவு
தூக்கமில்லா கனவுகளில்
தினம் துயிலுது அழகிய உன் நினைவு
இதழ்களின் நுனியில்
இன்ப மகரந்தம் பருகும்
நினைவுகள் உயிரில்
துன்ப அனலினை பொழியும்
அன்பின் அகம் உடையாளே
அனைத்தும் மறந்தாயே
கண்ணீர் பிடிக்குது எனக்கே
அது நீ தந்ததாலே
கல் நெஞ்சகாரி கொல்லாதடி என்னை
கல் நெஞ்சக்காரி கொல்லாதடி
கல் நெஞ்சகாரி கொல்லாதடி என்னை
கல் நெஞ்சக்காரி கொல்லாதடி
கனா காணும் இன்ப காலத்தில் எந்தன்
நிலா போனதென்ன தூரத்தில்
வினா வீசிவரும் பார்வைகள் நெஞ்சினில்
உலா போவதென்ன
நீ இருந்தாய் எந்தனுறவாய்
என் மனமது பறந்தது சிறகடித்து
நீ பிரிந்தாய் என்னை மறந்தாய்
என் உயிரது உருகுது சிறகொடிந்து
அடிக்கடி தொடரும் சண்டை
அணைத்திட அணையும்
கூடலின் மடியில் வந்த
ஊடல்கள் உடையும்
அன்பின் அகம் உடையாளே
அனைத்தும் மறந்தாயே
கெஞ்சும் எந்தன் நெஞ்சை
வெறுத்தே வதைத்தாயே
கல் நெஞ்சகாரி கொல்லாதடி என்னை
கல் நெஞ்சக்காரி கொல்லாதடி
கல் நெஞ்சகாரி கொல்லாதடி என்னை
கல் நெஞ்சக்காரி கொல்லாதடி
கனா காணும் இன்ப காலத்தில் எந்தன்
நிலா போனதென்ன தூரத்தில்
வினா வீசிவரும் பார்வைகள் நெஞ்சினில்
உலா போவதென்ன
இரவுகள் தனிமையில்
நரகமாய் போகுதுன்
நினைவுகள் இமைகளில்
தூறலை தூவுது
என் நெஞ்சில் ஜீவன் இல்லை
ஏன் உன் நெஞ்சில் ஈரம் இல்லை
கல் நெஞ்சகாரி கொல்லாதடி என்னை
கல் நெஞ்சக்காரி கொல்லாதடி
கல் நெஞ்சக்காரி கொல்லாதடி ஒரு
கல்ல நீ சொல்லா வீசாதடி
கல் நெஞ்சகாரி கொல்லாதடி என்னை
கல் நெஞ்சக்காரி கொல்லாதடி
கல் நெஞ்சக்காரி கொல்லாதடி என்
கண்ணாடி நெஞ்ச தாக்காதடி
Written by: Janarthana Pulenthiran, Nitha Jegan