Lyrics

காற்றே காற்றே நில்லு
நெஞ்சின் வலியை சொல்லு
கனவினில் வருபவன் யாரோ
மயக்கங்கள் தருபவன் யாரோ
காற்றே காற்றே நில்லு
நெஞ்சின் வலியை சொல்லு
கனவினில் வருபவன் யாரோ
மயக்கங்கள் தருபவன் யாரோ
நெஞ்சிலே என் நெஞ்சிலே
ஒரு மின்னலாய் வந்து பாய்கிறாய்
கண்ணிலே என் கனவினிலே
ஒரு மாயமாய் வந்து போகிறாய்
காற்றே காற்றே நில்லு
நெஞ்சின் வலியை சொல்லு
கனவினில் வருபவன் யாரோ
மயக்கங்கள் தருபவன் யாரோ
மனதிலே என் மனதிலே
உன் நிழல் வந்து ஆடுதே
இத்தாழிகளில் உன் புன்னகை
கண்களே கொள்ளை போகுதே
உன்னிடம் ஏன் இந்த தயக்கம்
இதை முதலில் பார்த்ததே இல்லை
என்னிடம் கேட்கும் பொழுது
என் வார்த்தையில் விடையே இல்லை
சிந்தனை சுவாசத்தை
பறித்து சென்றது ஏன் அன்பே
செயல் திறன் கைகளை
பிரித்து சென்றது ஏன் அன்பே
காற்றே காற்றே நில்லு
நெஞ்சின் வலியை சொல்லு
கனவினில் வருபவன் யாரோ
மயக்கங்கள் தருபவன் யாரோ
விந்தையோ உன் விந்தையோ
என் மனம் கொள்ளை போனதே
மௌனத்தில் ஒரு வெட்கத்தில்
நாணமே கொள்ளை போனதே
இதயத்தில் ஏன் இந்த தாகம்
என் தோற்றத்தில் ஏன் இந்த மாற்றம்
வானத்தை தாண்டும் உன் வேகம்
என் மனதினில் ஏன் இந்த தயக்கம்
ஒரே முறை உன்னைத்தான்
பார்க்கத்தானே ஏங்குகிறேன்
என் அன்பே உன்னைத்தான்
கனவில் நினைத்தே புலம்புகிறேன்
காற்றே காற்றே நில்லு
நெஞ்சின் வலியை சொல்லு
கனவினில் வருபவன் யாரோ
மயக்கங்கள் தருபவன் யாரோ
நெஞ்சிலே என் நெஞ்சிலே
ஒரு மின்னலாய் வந்து பாய்கிறாய்
கண்ணிலே என் கனவினிலே
ஒரு மாயமாய் வந்து போகிறாய்
காற்றே காற்றே நில்லு
நெஞ்சின் வலியை சொல்லு
கனவினில் வருபவன் யாரோ
மயக்கங்கள் தருபவன் யாரோ
Written by: Janarthanan Pulenthiran, Jayashree Padmanathan
instagramSharePathic_arrow_out