Presentada en

Créditos

AUSFÜHRENDE KÜNSTLER:INNEN
Jayashree Rajeev
Jayashree Rajeev
Künstler:in
KOMPOSITION UND LIEDTEXT
Kanmani Raja,Devaraya Swamigal
Kanmani Raja,Devaraya Swamigal
Songwriter:in

Letras

கந்தசஷ்டி கவசம் குறள் வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம். நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும் நிஷ்டையும் கைகூடும். நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை. காப்பு அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்க சரவணா பவனார் சிஷ்டருக் குதவும்செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி ஆட மையல் நடஞ்செய்யும் மயிவாகனனார்... 5 கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து வர வர வேலாயுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திர முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக... 10 வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக... 15 சரஹணபவனார் சடுதியில் வருக ரஹண பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரஹண வீரா நமோ நம நிபவ சரஹண நிறநிற நிறன... 20 வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளுக இளையோன் வருக பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும் பரந்த விழிகள் பன்னிரன்டலங்க... 25 விரைந்தனைக் காக்க வேலோன்வருக ஐயும் கிலியும் அடைவு டன்சௌவும் உய்யொளி சௌவும் உயிர் ஐயும் கிலியும் கிலியும் சௌவும் கிளரொளி ஐயும் நிலைபெற் றேன் முன் நிதமும் ஒளிரும் ...30 சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும் குண்டலியாம் சிவ குகன்தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்... 35 நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல் பூஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்தின மாலையும்... 40 முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகுடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளி பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை அழகும் இணை முழந்தாளும்... 45 திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செகக ணசெககண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுகண... 50 ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து வித்து மயிலோன் விந்து... 55 முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று ...60 உன்திரு வடியை உருதி என்றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க... 65 பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி இரண்டும் வேலவர் காக்க நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப பெருகவேல் காக்க... 70 முப்பத திருப்பல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க... 75 சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே ளிருதோள் வளம்பெறக் காக்க பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க... 80 வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுற செவ்வேல் காக்க நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க பிட்டமிரண்டும் பெருவேல் காக்க... 85 வட்ட குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடையிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினண அருள்வேல் காக்க கைக ளிரண்டும் கருணைவேல் காக்க... 90 முன்கையிரண்டும் முரண்வேல் காக்க பின்கையிரண்டும் பின்னவள் காக்க நாவில் ஸரஸ்வதி நற்றுணை ஆக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனை வேல் காக்க... 95 எப்பொழுதும் எனை எதில்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனக வேல் காக்க வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க... 100 ஏமத்தில் ஜாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தக்கத் தக்கத் தடையறத் தாக்க... 105 பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பு தம் வலாஷ்டிகப் பேய்களும் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்... 110 கொள்ளிவாய்ப்பேய்களும் குரலைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும் அடியனைக்கண்டால் அலறிக்கலங்கிட இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்... 115 கன புசைகொள்ளும் காளியோடனே வரும் விட்டங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக்காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட ஆனை அடியினில் அரும்பாவைகளும்... 120 பு னை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிறும் நீண்டமுடி மண்டையும் பாவைகளுடனும் பலகலசத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்... 125 காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்த குலைத்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட கால தூதாள் எனைக் கண்டாற் கலங்கிட... 130 அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டலறி மதிகெட்டோட படியினில் முட்ட பாசக் கையிற்றால் கட்டுடன் அங்கம் கதறிட க்கட்டு கட்டி உருட்டு கால்கை முறிய... 135 கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடிவேலால்... 140 பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடு விடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனிதொடர்ந் தோட... 145 தேளும் பாம்பும் செய்யான் புரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப பித்தம்... 150 சூலைசயங் குன்மம் சொக்குச்சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி பக்கப் பிளவை படர் தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருஅ ரை யாப்பும்... 155 எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாதோட நீ எனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்... 160 உன்னைத் துதிக்க உன் திருநாமம் சரஹண பவணே சையொளி பவனெ திரிபுர பவனெ திகழொளி பவனெ பரிபுர பவனெ பவம் ஒளி பவனெ அரிதிரு மருகா அமரா பதியைக் ...165 காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விதித்தாய் கந்தா குகனே கதிர்வேலவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே இடும்பனை ஏன்ற இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா... 170 கதிகா மத்துறை கதிர்வேல் முருகா பழனிப் பதிவாழ் பாலகுமாரா ஆவினன்குடி வாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே... 175 காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யான் உனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனை பாடினே ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடனேன் ஆவினன் பூதியை... 180 நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புட ன் இரஷி அன்னமுஞ் சொன்னமும் மெத்த மெத்த தாக வேலா யுதனார்... 185 சித்திப்பெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்... 190 வாழ்க வாழ்க வாரணத்துவசம் வாழ்க வாழ்க வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செய்தால் பெற்றவன் நீ குறு பொறுப்பது உன் கடன் ...195 பெற்றவள் குறமகள் பெற்றவளாமே பிள்ளையென் றன்பாய் பிரியமளித்து மைந்தனென் மீது மனமகிழ்ந்தளிலித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய... 200 பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசாரத்துடன் அங்கந் துலக்கி நேச முடன் ஓருநினைவது வாகி கந்தர் சஷ்டக் கவசம் இதனைச்... 205 சிந்தை கலங்காது தியானிப்பவவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்து நீறணிய அஷ்டதி க்குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்... 210 மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்தநாளுமீ ரெட்டா வாழ்வார் கந்தர்கை வேலாம் கவசத்தடியை... 215 வழியாற் கான மெய்யாம் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரை பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி... 220 அறிந்தென் துள்ளம் அஷ்டலட் சிமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத்மாவைத் துணித்தகை யதனால் . இருபபத் தேர்வர்க்கு உவந்தமு தளித்த குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்... 225 சின்னக் குழந்தை சேவடி போற்றும் என்னை தடுத தாட்க்கொள்ள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனாபதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி... 230 திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே... 235 மயில்நடமிடுவாய் மலர் அடி சரணம் சரணம் சரணம் சரஹண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்...
Writer(s): Devaraya Swamigal, Sulamangalam Rajalakshmi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out