Lyrics

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் ஆடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவைப் போல சூடினாள்
சிந்து நதிக்கரை ஓரம்
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர் வரிசை
சொல்லிக் கொடுத்தேன் கதை கதை
அள்ளிக் கொடுத்தால் அதை அதை
காதல் கண்ணம்மா
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்துக் கொண்டாள்
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்துக் கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
வான வெளியில் இதம் இதம்
சோலை வெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் ஆடினான்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவைப் போல சூடினாள்
சிந்து நதிக்கரை ஓரம்
Written by: Ilaiyaraaja, Kannadasan
instagramSharePathic_arrow_out